ED அதிகாரி அங்கீத் திவாரி வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மனுத்தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில் அங்கித் திவாரி தொடர்பான வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day