வழக்கறிஞர் உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


பி.வி காலனி சாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஆகாஷ், நண்பர் அர்ஜூனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த இருவர், ஆகாஷ் மற்றும் அர்ஜூனை கத்தியால் வெட்டியுள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் மற்றும் விக்னேஷை பிடித்து விசாரணை செய்தனர். அதில், ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அருணை அவ்வப்போது கிண்டல் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண் நண்பர்களுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அருண், விக்னேஷை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Night
Day