ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

சென்னையிலிருந்து நெல்லை செல்லும் விரைவு ரயிலில் கடந்த வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில்  சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரின் பைகளில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவர் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் ஊழியர்கள் என்றும் ஒருவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தெரியவந்தது. இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்‍கம் அளிக்‍குமாறு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Night
Day