ராணிப்பேட்டை: விவசாய நிலத்தில் பெண் கழுத்தை அறுத்து கொடூர கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்வேலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேல்வலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள மின்மோட்டாரை இயக்கிவிட்டு வந்துள்ளார். மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து மின்மோட்டாரை நிறுத்த சென்ற அவரை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் ஜெயலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி இதுகுறித்து வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Night
Day