பராமரிப்பு பணிக்காக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்றும் நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ரோப் கார் சேவையானது பராமரிப்பு பணிக்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் நிறுத்தப்படுவது வழக்கம், அதன்படி பிப்ரவரி 20 மற்றும் 21-ஆம் தேதிகளில். அதாவது இன்றும்  நாளையும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Night
Day