தமிழகம்
"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாய நிலத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உயிரை பணயம் வைத்து மின்மாற்றியில் ஏறி விவசாயி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாமூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றியில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் வராததால் வேறு வழியின்றி விவசாயி ஒருவர் தாமாகவே மின்மாற்றில் ஏறி பழுதடைந்த மின் இணைப்பை சீரமைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...