க்ரைம்
இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசு மருத்துவமனையின் ஐசியு-வில் இருந்த பெண்ணின் தாலிக்கயிற்றில் இருந்த நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு பகுதி விமலா, உடல்நலக்குறைவால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தாலிக்கயிற்றில் இருந்த 6 கிராம் நகைகள் திருடு போனது. இதுகுறித்து அளித்த புகாரின்படி வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சத்யா நகர் பகுதி நந்தகுமாரை கைது செய்தனர். விசாரணையில், விமலாவின் நகைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த விலைஉயர்ந்த பல்சர் வாகனத்தை நந்தகுமார் திருடியது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமாரை சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...