க்ரைம்
கணவனை அடித்து மனைவியின் தாலி செயினை திருடிவிட்டு தப்பியோட்டம்...
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். சவேரியார்பட்டி பகுதி கொள்ளிடம் ஆற்றில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே கென்ற மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ராஜமாணிக்கம், ஐயப்பன், வல்லரசு, குணசேகரன், அன்பழகன், வெங்கடாசலம் மற்றும் நடராஜன் ஆகியோரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...