க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
மும்பையில் வயதான பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞரின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியின் கதவை திறந்து வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது வயதான பெண்கள் 2 பேர் கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அந்த இளைஞர் திடீரென ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஒடும் ரயிலில் இருந்து குதித்து, தண்டவாளத்தில் விழுந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நகைகளை அணிந்து கொண்டு தனியாக பயணிக்கும் பெண்கள் தங்கள் மீதும், தங்கள் உடைமைகள் மீதும் கவனமாக இருக்க வேண்டுமென இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டே விலகிவிடுவேன் என பாஜக வேட்பாளர...