நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கைதி காவல் நிலையம் அருகே மர்ம நபர்கள் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கைதியை காவல் நிலையம் அருகே மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த மதன் குமாரை சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் தினமும் காலை மாலை வேளைகளில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை மதன்குமார் கையெழுத்து போட்டுவிட்டு காவல்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றார். அப்போது மதன்குமாரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day