திருவாரூர்: விடுதலை சிறுத்தை நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் அருகே தனிப்படை காவல்துறையினர் விடுதலை சிறுத்தை நிர்வாகி மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி திருவாரூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில்  ராஜ்குமார் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் இளையராஜா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் இளையராஜாவை மீண்டும் கைது செய்ய திருவாரூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் இளையராஜா வீட்டுக்கு, இரவு நேரங்களில் அடிக்கடி செல்லும் தனிப்படை காவல்துறையினர் அங்குள்ள பெண்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதோடு, அவரது மனைவியை பார்த்து உன்னை ஒழித்துகட்டி உன் கதையை முடித்துவிடுவேன் என ரவுடியை போன்று மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

Night
Day