மனைவியை கத்திரிக்கோலால் குத்திவிட்டு கணவன் தலைமறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தகாத உறவு கொண்ட பெண்ணுடன் சேர்ந்து மனைவியை கத்திரிக்கோலால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சின்னமனூர் பத்மசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனிக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இருபிள்ளைகளும் உள்ள நிலையில், கம்பம் கக்கன் காலனியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு வந்துள்ளது. இந்நிலையில் பிச்சைக்கனி கடந்த 3 மாதங்களாக ஐஸ்வர்யா வீட்டிலேயே தங்கியிருந்ததால், மகாலட்சுமி அங்கு சென்று கணவரை அழைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், பிச்சைக்கனி தனது மனைவியை கத்திரிக்கோலால் குத்திவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து மகாலட்சுமி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பிச்சைக்கனியை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day