பெண்ணை பீர் பாட்டிலால் தாக்‍கிய 5 இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடி அருகே பெண்ணின் மண்டையை உடைத்த 5 இளைஞர்களை பொதுமக்‍கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

எஸ்.ஏ.காலனி பகுதியில் 5 இளைஞர்கள் மதுபோதையில் சத்தம் போட்டுக்கொண்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்‍கேட்ட கவிதா என்ற இளம்பெண்ணை, அந்த இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்‍கியுள்ளனர். இதில் அவருக்‍கு தலையில் காயம் ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். இதனையடுத்து அப்பகுதி மக்‍கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day