இளைஞரை காவலர் உருட்டு கட்டையால் தாக்‍கும் வீடியோ - காவல் ஆணையரகம் விளக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஆவடியில் காவலர் ஒருவர் இளைஞரை உருட்டு கட்டையால் தாக்‍கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், சீருடை அணிந்த காவலர் ஒருவர் இளைஞரை உருட்டு கட்டையால் தாக்‍குவது போன்றும், அதனை அங்கிருந்த பெண் தடுக்‍க முயற்சிப்பது போன்றும் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து காவல் ஆணையரகம் விளக்‍கம் அளித்துள்ளது. அதில் ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் சாலையில் செல்லும் மக்களை போதையில் இருந்த லோகேஷ் என்ற இளைஞர் கற்களை கொண்டு அடித்து வந்ததாகவும், அதனை விசாரிக்க சென்ற காவலர் சரவணனை கற்களைக் கொண்டு அடிக்க முயன்றதால், குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day