ஷாருக்கான் விக்கெட்டை எடுத்தப்பின் பறக்கும் முத்தம் அளித்த கோலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேற்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் வீரர் ஷாருக்கான் விக்கெட்டை எடுத்த பின் பெங்களூரு வீரர் விராட் கோலி பறக்கும் முத்தம் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குஜராத் அணி பவர் பிளேவிலே 19 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. தொடர்ந்து, களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடியாக ஆடி குஜராத் அணியின் ரன்களை உயர்த்தினார். இந்நிலையில், அவர் ரன் ஓடும் போது விராட் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஷாருக்கான் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது கோலி அவருக்கு பறக்கும் முத்தம் அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, விராட் கோலி நடுவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day