புனே: நடத்தையில் சந்தேகம் - காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஐடி பெண் ஊழியர் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிஞ்சவாடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வந்தனா திவேதி என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ரிஷப் நிகாம் என்பவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும், கடந்த 25ம் தேதி புனேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, வந்தனா மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு ரிஷப் தப்பிச் சென்றார். ஹோட்டல் ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் ரிஷபை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day