க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தனியார் மதுபான விடுதி மேலாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவசேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஹெரிடேஜ்-இன் என்ற தனியார் மதுபான விடுதிக்கு மது அருந்த சென்ற 5 நபர்களுக்கும், மதுபான கடை மேலாளர் ரகுநந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரகுந்தனை சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து சென்ற ஆலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் மீட்பு