புதுச்சேரி: இருசக்‍கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் இருசக்‍கர வாகனத்தை திருடிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா என்பவர் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்‍கர வாகனம் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்‍குப் பதிவுசெய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு பதிவு காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு இளைஞர்கள் வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வில்லியனூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மற்றும் விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். நண்பர் விக்‍னேஸ்வரன் இருசக்‍கர வாகனம் இல்லாமல் புலம்பியதால், மது போதையில் இரு இளைஞர்களும் முஸ்தபாவின் இருசக்‍கர வாகனத்தை திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

Night
Day