பீகாரில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே செல்போனை பறிக்‍க முயன்ற திருடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே செல்போனை பறிக்‍க முயன்ற திருடனை கதற கதற தொங்கவிட்டு பயணி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பீகார் மாநிலம் பகல்பூர் அருகே கலேஷ் என்ற இடத்தில் ரயில் மெதுவாக சென்றபோது உள்ளே இருந்த பயணி ஒருவரின் கையில் இருந்த செல்போனை ஜன்னல் வழியே கையை விட்டு பறிக்‍க முயன்றான் திருடன் ஒருவன். உடனே சுதாரித்த பயணி, அந்த திருடனின் கையை மடக்‍கி பிடித்துக்‍கொண்டார். ரயில் வேகம் எடுத்தவுடன் திருடன் வலி பொறுக்‍காமல் கதற தொடங்கினான். ஒரு ​கிலோ மீட்டர் தொலைவுக்‍கு 
திருடனின் கையை விடாமல் பயணி இழுத்துச்சென்றார். சக பயணிகளும் திருடனை சரமாரியாக தாக்‍கியதுடன் செல்போனில் படம் எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

Night
Day