பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சா வைத்து கைதிக்கு கொடுக்க முயற்சி - பார்க்கச் சென்றவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மத்திய சிறையில், பிஸ்கட் பாக்கெட்டிற்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மத்திய சிறையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கவியரசு என்பவர் விசாரணை கைதியாக இருந்த வருகிறார். இந்த நிலையில் அவரைப் பார்க்க சென்ற தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர், தான் வாங்கிச் சென்ற பிஸ்கெட் பாக்கெட்டிற்குள் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளார். அப்போது சிறைக்காவலர்கள் சோதனையின் போது பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா இருப்பது தெரிந்ததை அடுத்து, சிறை நிர்வாகத்தின்ர் முகமது சுகிலை, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Night
Day