பிறந்து 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வீட்டின் அருகே கட்டைப்பையில் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே 43 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை வீட்டின் அருகே கட்டைப்பையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

செல்வா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் அருண்- பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் பாரதி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரு குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு சென்ற பாரதி, மீண்டு வந்து பார்த்தபோது ஒரு பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அவரது கூக்குரைக் கேட்டு பதறியடித்து வந்த அருணின் தாய் மற்றும் அவரது மூத்த மருமகள், குழந்தை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில் அங்கு வந்த போலீசார், குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உடல்நிலை சரியில்லாத குழந்தையை கட்டைபையில் வைத்து மைதானத்தில் போட்டு விட்டு தாயே நாடகமாடியது அம்பலமானது. 

பின்னர் சம்பவ இடத்தில் கட்டைப்பையில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு பாரதியை அழைத்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Night
Day