எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் அருகே பதினோறாம் வகுப்பு பள்ளி மாணவியை, இளைஞர் உட்பட பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பாதிக்கப்பட்ட மாணவி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பதினோறாம் வகுப்பு பயின்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞரும், அவருடன் 8 மற்றும் 9 வகுப்பு பயிலும் 3 மாணவர்களும் சேர்ந்து மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தாக கூறப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்த மாணவியை களக்காட்டூர் பகுதியில் மறைவாக உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் மாநகர காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில், 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஒரு மாணவரின் பெற்றோர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை விட அந்த மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பனிரெண்டாம் வகுப்பு மாணவியை காவல்துறை மிரட்டி வாக்குமூலம் பெற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சி மட்டுமே நடைபெற்றதாக வாக்குமூலம் பெறுவதற்காக அனைத்து முயற்சிகளிலும் காவல்துறை ஈடுபடுவதாக மாணவி தரப்பில் வேதனையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கை திசைத்திருப்பும் முயற்சியில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் ஈடுபட்டுள்ளதாக, எதிர்காலத்தில் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என மாணவியிடம் போலீசார் மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.