க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
நெல்லை அருகே தகாத உறவில் ஈடுபட்ட மகளை தந்தையே தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுவக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பேச்சி என்ற பெண் தனது கணவர் கொம்பையாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஓராண்டுக்கு முன் நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை அருகே உள்ள தந்தை மாரியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக முத்துப்பேச்சி வேறொருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் தந்தை மாரியப்பன் கண்டித்து வந்துள்ளார். முத்துபேச்சி கேட்காததால் பாட்டி வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்ற மாரியப்பன், மேலப்பாட்டம் அருகே மகளை தலையை துண்டித்து கொலை செய்தார். தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சம்பவ இடத்தில் இருந்த தந்தை மாரியப்பனை கைது செய்தனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி