நீலகிரி : காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமான தேயிலை தோட்ட உரிமையாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். குன்னூர் அருகே வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் பகுதியில் எபினேசர் ஜெயசீலபாண்டியன் என்பவரது தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி கழிவுகளை தீயிட்டு எரித்ததில் தீ அருகிலுள்ள வனப்பகுதிக்கு பரவியது. இதில்  சாம்பிராணி, கற்பூர மரங்கள் அதிகம் எரிந்து நாசமாகின. கடந்த இரண்டு நாட்களாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர், காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த எபினேசர் ஜெயசீல பாண்டியன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

Night
Day