மக்களவைத் தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரசிடம் பணம் இல்லை - காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸிடம் பணம் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
கா்நாடகாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், காங்கிரஸின் வங்கிக் கணக்கை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளதாகவும் சாடினார். வருமானவரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கார்கே, மக்கள் அளித்த பணத்தை தான் கட்சியின் வங்கிக் கணக்கில் வைத்திருந்ததாகவும், அந்த பணத்தை எடுக்கக்கூடாது என்பதற்காக வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதால், மக்களவைத் தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை என கூறினார். 

varient
Night
Day