நாகை : பைக் பெட்ரோல் டேங்‍கில் நூதன முறையில் சாராயம் கடத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே இருசக்‍கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மூலம் நூதன முறையில் சாராயம் கடத்திச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 

மேலவாஞ்சூர் அடுத்த முட்டம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் சாராயத்தை ஊற்றி கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, பெருங்கடம்பனூரை சேர்ந்த முருகநாதன் மற்றும் விஜய் ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் கடத்தி வந்த 220 லிட்டர் சாராய பாக்கெட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Night
Day