முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் 101வது பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் வாஜ்பாயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அரமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பாஜக தேசிய தலைவர் நிதின் பிபின் மற்றும் பாஜக தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Night
Day