நாகை : நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை - 8 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே இருதரப்பு மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 8 மீனவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம் மற்றும் காலாத்திநாதன் ஆகிய மூவரும் துறைமுகத்துக்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் பைப்பர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு வந்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்த கோகிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஆத்மநாதன் விரித்து வைத்திருந்து பைபர் படகு வலைகளை அறுத்துச் சென்றது. இதுகுறித்து இவர்கள் தட்டிக்கேட்டதால் கோபமடைந்த விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது படகை மோதினர். இதில் 3 பேரும் கடல் நீரில் விழுந்தனர். ஆனால் கோபம் தீராத அவர்கள் ஆயுதங்களால் மூன்று பேரையும் கொடுரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது கடலில் உயிருக்கு போராடியவர்களை அவ்வழியே வந்த நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் சிவநேசசெல்வம், காலாத்திநாதன் உயிரிழந்தனர். மேலும் ஆத்மநாதன் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு 8 மீனவர்களை கைது செய்த நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Night
Day