நாகை : சொத்து பிரச்சனையில் தம்பியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் கீழையூர் அருகே சொத்து பிரச்சனையில் தம்பியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். ஈசனூர் கட்டளை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கும் தம்பி சந்தியாகுவுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் பங்கேற்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ஆரோக்கியசாமி, மண்வெட்டியை எடுத்து தம்பியை அடித்துள்ளார். இதில் சந்தியாகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, ஆரோக்கியசாமியை கைது செய்தனர். 

varient
Night
Day