க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
தேனி அருகே சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். வடுகபட்டியை சேர்ந்த முருகன், பிரபு ஆகியோர், பின்னத்தேவன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் அருகே உரிமம் பெற்று பார் நடத்தி வந்துள்ளனர். அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் இரண்டு பேரும் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, அல்லிநகரம் என்ற இடத்தில் பிரபு சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முருகன் அளித்த புகாரின்பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக நினைத்து, வடுகபட்டியில் இருந்த பிரபுவை, முருகன் அரிவாளால் வெட்டி சாய்த்தார். இதில், படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி