மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழலில், நடவு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். இந்நிலையில் 240 வோல்டுக்கு பதிலாக 100 வோல்ட் மின்சாரம் மட்டுமே குறைந்த மின்னழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால் மின்மோட்டார்கள் இயங்கவில்லை என கூறும் விவசாயிகள், கருகும் நடவு பயிர்களை காக்க முறையாக முன்விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day