சென்னை: 3 நாட்களுக்கும் மேலாக தொடர் மின்வெட்டு என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சைதாப்பேட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் உள்ள சலவையர் காலனி முதல் மற்றும் 2வது தெருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Night
Day