சென்னை: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எனக்கூறி இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அருகே ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எனக்கூறி இளைஞரை சரமாரியாக தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஜார்ஜ்டவுனை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், OMR பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது தோழியுடன் ராயபுரத்திலிருந்து காரில் உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தார். பட்டினம்பாக்கம் அருகே வந்தபோது, இவர்களுக்கு முன்பு சென்ற கார் விபத்தை ஏற்படுத்துவதுபோல் நின்றுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிவண்ணன் காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த காரில் இருந்த லோகப்பிரகாசம் என்பவர், தான் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எனக்கூறி மணிவண்ணனை தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

Night
Day