க்ரைம்
திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் காதல் ஜோடியை மிரட்டி தங்க சங்கிலியை பறித்துச்சென்ற ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர். சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் கடந்த 8-ஆம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற இளைஞர் ஒருவர் பாலகணேசனை மிரட்டி அவரது காதலி அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின்படி தென்பாகம் போலீசார் விசாரைணை நடத்தி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் ராஜ் என்பவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து டென்னிஸ் ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர், மணிமுத்தாறு பட்டாலியன் ஆயுதப்படை காவலர் என்பது தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...