ஈரோடு அருகே இரவில் 3 மணி நேரத்துக்‍கு மேலாக மின்சாரம் துண்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரம் பகுதியில் இரவில் 3 மணி நேரத்துக்‍கு மேலாக மின்சாரம் இல்லாததால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்‍குள்ளாயினர். தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரம் பகுதியில் 3 மணி நேரத்துக்‍கு மேலாக மின்சாரம் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வேறு வழியின்றி செல் போன் டார்ச்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி படித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீரான மின்சாரத்தை விநியோகிக்‍க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day