துபாயில் இருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் - விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இளைஞரிடம் இருந்து 55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் உடைமையில் மறைத்து வைத்து 790 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கடலூரை சேர்ந்த முகமது தஸ்தாகீர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

Night
Day