ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் - விசைப்படகு மூலம் தமிழகம் வந்தவர்களை மீட்ட கடலோர காவல் படை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் நாட்டிலிருந்து தப்பி விசைபடகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஆண்டு ஈரானுக்கு மீன்பிடி வேலைக்கு சென்றனர். ஈரானில் உள்ள அரேபிய முதலாளி இவர்களிடம் வேலை வாங்கிவிட்டு பணம் தராமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மீனவர்கள், வேறு வழியின்றி ஈரானில் இருந்து தப்பி 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை விசைபடகு மூலம் பயணம் செய்து தமிழகம் வந்தனர். இவர்கள் வந்த படகில் டீசல் குறைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடலோர காவல் படையினர் 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். 

varient
Night
Day