திண்டுக்கல்: ஜவுளி கடையில் புடவை பண்டலை திருடிய பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஜவுளி கடையில் புடவை பண்டலை திருடிய பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூரில் உள்ள கிருஷ்ணா ஜவுளி கடை அமைந்துள்ளது. இங்கு பொங்கல் பண்டிகைக்காக ஆடைகள் எடுப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் களைக்கட்டியது. அப்போது, ஜவுளி எடுப்பது போல் நுழைந்த இரண்டு பெண்கள், கீழே வைத்திருந்த சேலை பண்டலை தூக்கி கட்டை பையில் வைத்துகொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் சேலை பண்டல் காணவில்லை என தெரிய வர, ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, இரண்டு பெண்கள் புடவை பண்டலை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

Night
Day