டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து; 17 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவில்பட்டி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூர் அருகே பள்ளி மாணவர்களை அழைத்துக் சென்ற பள்ளி வாகனம், எதிரே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் காரில் பயணித்த ஷேக் செய்யது சபீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வாகனம் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநர்கள், இரு மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day