தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் : 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே முன்னாள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் முன்விரோதம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளிகளை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், காரப்பள்ளி பகுதியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகளான பவன் கல்யாண், நாகர்ஜுனா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day