சேலம்: பாமாயில், அரிசி கடையின் மேற்கூரையை பிரித்து ரொக்கம் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரிசி மற்றும் பாமாயில் கடையின் மேற்கூரையை பிரித்து கடையில் இருந்த 4 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உடையார் பாளையம் பகுதியில் அன்பழகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் பாமாயில் மற்றும் அரிசி கடை நடத்தி வருகின்றனர்.   வழக்கம்போல் இருவரும் இரவு கடையை மூடிவிட்டு அதிகாலை கடையை திறந்துள்ளனர். அப்போது கடையின்  மேற்கூரை உடைக்கப்பட்டு பாமாயில் கடையில் இருந்த 3 லட்சத்து 62 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரிசி கடையில் இருந்த 23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

varient
Night
Day