க்ரைம்
காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு ?...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஒரே ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊனத்தூரை சேர்ந்த வினோதினி என்ற பெண், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்ற வினோதினி, விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு ?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...