சென்னை: முறையற்ற உறவு காரணமாக பெண்ணின் கணவர் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் முறையற்ற உறவு காரணமாக பெண்ணின் கணவரை கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த மைக்கல் துரை பாண்டியனுக்‍கு பொன் மாலா என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் 3வது மாடியில் வசித்து வந்த கொத்தனார் வெங்கடேசனுக்‍கும் பொன்மாலாவுக்‍கும் முறையற்ற உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வெங்கடேசனுக்‍கும் பொன்மாலாவுக்‍கும் தகராறு ஏற்பட்டதால், வெங்கடேசன் பொன்மாலாவை அடித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மைக்‍கல், வெங்கடேசனை துரத்திச் சென்றபோது, அவர், மைக்‍கலை 2வது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்‍குப் பதிவு செய்த போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day