கடற்படையின் புதிய தளபதியாக தினேஷ் திரிபாதி பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதி பதவி ஏற்றுக்கொண்டார். கடற்படையின் தளபதியாக இருந்த ஹரி குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து கடற்படையின் துணை தளபதியாக இருந்த தினேஷ் திரிபாதிக்கு இப்பதவி வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்க மேலாக கடற்படையில் பணிபுரிந்து வந்த தினேஷ் திரிபாதி, கடந்த ஜனவரி மாதம் தான் கடற்படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு தன் தாய் ரஜ்னி திரிபாதியிடம் ஆசிர்வாதம் பெற்ற தினேஷ் திரிபாதியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Night
Day