சென்னை: போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர் உயிரிழப்பு - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புளியந்தோப்பு அருகே போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டாளம் கனக ராய தோட்டம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர், கடந்த 26ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசியாக பயன்படுத்திய நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆகாஷ், எல்சன் ஆகியோரிடம் தீனதயாளன் மற்றும் அவரது நண்பர்கள் போதை மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day