சென்னை : சிஎம்டிஏ தரவுகள் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் அலுவலக தரவுகள் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த புகாரில், அலுவலகத்திற்கு வரும் இ-மெயில்களை திருடி தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுதொடர்பாக தற்காலிக ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் டென்டர் பற்றிய விவரங்கள் கசிந்ததால், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தகவலை வெளியிட்டதாக கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day