சென்னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த சிட்லப்பாகத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம்பரம் தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிட்லப்பாக்கம் அடுத்த ஜட்ஜ் காலணியில் சமூக நலத்துறை சார்பில் மகளிர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 183 மாணவிகள் அங்கு தங்கியுள்ளனர். இதேபோல் காப்பகத்தில கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். தந்தையை இழந்ததால் ஏற்பட்ட வறுமை காரணமாக அவருடைய தாயார், இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். 

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அந்த சிறுமி அழுது கொண்டிருந்ததைப் பார்த்த காப்பகத்தில் இருந்தவர்கள் விசாரித்த போது, அதிகாலை 4 மணி அளவில் காப்பக காவலாளி தூக்கிச் சென்று கால்களை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அவர்கள், கால்கள் உடைந்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காப்பாக காவலாளி மேத்யூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றது. இதேபோல், சிட்லப்பாகத்தில் உள்ள விடுதியில் தாம்பரம் தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினர்.

Night
Day