எழுத்தின் அளவு: அ+ அ- அ
கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாததால் கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துவதாகவும் அதனால் 2 ஆயிரத்து 291 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது.
இந்தநிலையில் பிஎம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதாகவும் கூறி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த அவசரமும் தேவையில்லை எனக் கூறி அவசர வழக்காக பட்டியலிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.