குமரி: ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரிடம் 3 சவரன் தங்க சங்கிலி திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் கருங்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரிடம் இருந்து 3 சவரன் தங்க சங்கிலியை திருடி சென்ற இரண்டு பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.. மத்திக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரானா் நேசய்யன். இவர் திக்கணங்கோடு பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்துவிட்டு போதையில் சாலையில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக சென்ற இரண்டு இளைஞர்கள் அவருடைய கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை திருடி சென்றுள்ளனர். புகார் தொடர்பாக காவல்துறையினா், திக்கணங்கோடு கொல்லை பகுதியை சேர்ந்த ஜெனிஷ், அஜய் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்து அவா்களிடம் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day