குடிப்பதற்கு பணம் தராததால் தாயை அடித்து கொலை செய்த மகன் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஜெயபுரம்புதூரை சேர்ந்த அய்யன்துரை-பூபதியம்மாள் என்பவரின் மகன் பரமசிவன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து அய்யன்துரை வீடு திரும்பியபோது, மனைவி பூபதியம்மாள் தூக்கு போட்டவாறு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தனது சகோதரன் பரமசிவன்தான் காரணம் என்றும் சகோதரா் வெள்ளையன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பரமசிவனை போலீசார் கைது செய்த நிலையில், குடிப்பதற்கு பணம் தராததால் தாயை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Night
Day